தி.மலை: மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசு பள்ளி ஆசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், இது குறித்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணையில் நடத்தினர். இந்த விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆங்கில ஆசிரியர் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Government teacher arrested for sexually harassing school girl in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->