அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறைக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள் - துப்புதுலக்கும் போலீசார்! - Seithipunal
Seithipunal


தர்மபுரி, கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுங்கரள்ளி  நடுநிலைப் பள்ளியில் சுமார் 152 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 

கடந்த 12ஆம் தேதி தீபாவளி விடுமுறையை முடித்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டதும் தலைமை ஆசிரியர் அவரது அறையை திறந்து பார்த்துள்ளார். 

அப்போது அறையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் மற்றும் மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் எரிந்து சேதமாகி கிடந்தன. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். 

தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மர்ம நபர்கள் தலைமை ஆசிரியர் அறையின் ஜன்னலைத் திறந்து தீ வைத்து சென்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது. 

இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பல்வேறு நேரங்களில் மர்ம நபர்கள் மது அருந்துவதற்கு பள்ளி கட்டிடத்தை பயன்படுத்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

அரசு பள்ளி, தலைமை ஆசிரியர் அறையில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government school headmaster room fire police inquiry


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->