மாம்பழம் சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில் - வைரலாகும் ஜி.கே மணியின் பதிவு.! - Seithipunal
Seithipunal


நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் தி.மு.க.கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என்று நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

இதில், தி.மு.க. தனது கூட்டணியை அறிவித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறது. இருப்பினும், பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படமால் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் உயர்மட்ட தலைமை நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே, பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது- "பருவ காலத்தில் மாமரங்கள் பூ பூத்து குலுங்கும் மகிழ்ச்சியான அற்புதக் காட்சி. மாங்காய் காய்த்து "மாம்பழம்" சுவைக்க அறுவடை காலம் மிக விரைவில்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gk mani tweet viral


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->