குடித்துவிட்டு சண்டை செய்த கணவன்.. மனைவியின் செய்கையால் கதறிய கணவன்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி மானக்காவலசு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கவிதா (வயது 34). இவர்கள் இருவரும் கடந்த 14 வருடத்திற்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், முருகேசனிற்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று முருகேசன் மது அருந்திவிட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி கவிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.

வீட்டின் உள்அறைக்கு சென்ற கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவி அறைக்குள் செல்வதை கண்டு பதறி பலமுறை கதவை தட்டியும் கதவை திறக்காததால் முருகேசன் கதவை உடைத்து உள்ளே செல்கையில் விபரீதம் புரிந்துள்ளது. காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl suicide in erode husband torture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->