உதவி கேட்ட 7 ஆம் வகுப்பு சிறுமி: உறுதி அளித்த கனிமொழி எம்.பி.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தூத்துக்குடி தொகுதி எம்.பி, மற்றும் தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி களத்தில் இறங்கி தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். 

அந்த வகையில் தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே மேலாத்தூர்-சொக்கபழங்கரை ஊராட்சியில் நேற்று கனிமொழி எம்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது அங்கு கண் பார்வை குறைபாடு உள்ள ஏழாம் வகுப்பு படித்த சிறுமியை பார்த்த கனிமொழி எம்.பி. அருகில் அழைத்து பேசிய போது சிறுமி, தனக்கு கண்பார்வையில் பிரச்சனை இருப்பதாகவும் அதற்கான மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

சிறுமியின் அந்த வார்த்தையை கேட்டதும் உடனடியாக கண் மருத்துவ சிகிச்சைக்கு கனிமொழி எம்.பி. ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl sought help MP kanimozhi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->