காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற வாலிபர்.! குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம்.!
girl friend poisoned to boy friend in chennai
காதலியுடன் பிறந்தநாள் கொண்டாட சென்ற வாலிபர்.! குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த காதலி.!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அருகே மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவருக்கு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பதினாறு வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியது.
இந்த நிலையில் திருப்பூரில் பணியாற்றி வந்த சஞ்சீவ் குமார், தனது பிறந்தநாளை காதலியுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக, சென்னைக்கு வந்துள்ளார். அதன் படி அவர்கள் இருவரும் வெளியில் சென்று விட்டு, இறுதியாக ஊர் திரும்புவதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, காதலி விஷம் கலந்த குளிர்பானத்தை, சஞ்சீவ் குமாரிடம் கொடுத்துள்ளார். அதனை சஞ்சீவ் குமார் வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் சஞ்சீவ் குமாருக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சஞ்சீவ்குமார் சம்பவம் குறித்து தனது உறவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி அவர்கள் விரைந்து வந்து சஞ்சீவ் குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சஞ்சீவ் குமார் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் இறப்பதற்கு முன், காதலி குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்துவிட்டதாக மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் படி போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
girl friend poisoned to boy friend in chennai