சென்னை பிராட்வே பேருந்து நிறுத்தத்தில் திடீரென மரக்கிளை முறிந்து விழுந்ததில் 4 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


சென்னை பிராட்வே பேருந்து நிறுத்தத்தில் திடீரென மரக்கிளை முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

சென்னை பிராட்வே பேருந்து நிறுத்தத்தில் உள்ள பழமைவாய்ந்த மரத்திலிருந்து நேற்று காலை திடீரென பெரிய மரக்கிளை முறிந்து விழுந்துள்ளது.

இதனால் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து ஓடிய நிலையில், காயத்ரி மற்றும் வசந்தா என்ற இரண்டு பெண்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்து கண்டக்டர் சுதாகர் மற்றும் ஓட்டுனர் பாஸ்கர் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மரக்கிளைகளை அகற்றினர். மேலும் இந்த சம்பவம் பேருந்து நிறுத்தத்தில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Four people were injured when a tree branch fell on them at a bus stop


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->