இபிஎஸ் கை காட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் - பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 26 ஆம் தேதி கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது. 

தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் 69.46% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன் பேசியுள்ளார். 

அதாவது, கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக இரட்டை இலக்கங்களில் தொகுதிகளை வெல்லும். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி குறிப்பிட்ட வாக்குகளை பெற்றாலும் அவர்களால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதிகளை கூட வெல்ல முடியாது. 

மேலும், வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி கை காட்டும் நபர்தான் அடுத்த பிரதமர் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். இவரது பேட்டி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

formar minister vaikai selvan press meet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->