முதல் முறையாக 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டா..கிருஷ்ணகிரிக்கு அடித்த ஜாக்பாட்! - Seithipunal
Seithipunal


 தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும்   கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
அதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை ரோடு மேம்பாலத்தில் இருந்து முதல்-அமைச்சரின் ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது . இந்த ரோடு ஷோ ராயக்கோட்டை மேம்பாலம், அண்ணா சிலை, பெங்களூரு சாலை வழியாக  5 ரோடு ரவுண்டானா வரை நடந்தது .

பின்னர் அங்கிருந்து சென்ற முதல்-அமைச்சர்,  சென்னை பைபாஸ் ரோடு வரையில் சென்று, பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து அவர் கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற  அரசு விழாவிற்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து விழா மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சி அரங்குகளை முதல்-அமைச்சர் பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சரை கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், 85 ஆயிரத்து 711 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

For the first time 85,711 people received house site pattas Jackpot for Krishnagiri


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->