பள்ளிக்கரணையில் பல பரிசுகளைக் குவித்த கால்பந்து வீரர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.,! - Seithipunal
Seithipunal


பள்ளிக்கரணையில் பல பரிசுகளைக் குவித்த கால்பந்து வீரர் நீரில் மொழி உயிரிழப்பு.,!

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை பகுதியில் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் செந்தில்-ஜீவா தம்பதியினர். இவரது மகன் ஜீவித். இவர் பள்ளிக்கரணையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவர் தனியார் கிளப் மூலமாக ஜூனியர் அளவிலான கால்பந்து அணியில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், ஜீவித் அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள ஜூனியர் அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில் ஜீவித் நேற்று காலை தன் தாயிடம் பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறிவிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்கரணை ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உள்ளார்.

இதைப்பார்த்து பதறி போன அவரது நண்பர்கள் தன் நண்பனைக் காப்பாற்றுமாறு கத்திக் கூச்சலிட்டுள்ளனர். இதைக்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஏரியில் இறங்கி ஜீவித்தை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் ஜீவித்ததைக் காப்பாற்ற முடியவில்லை.

இதையடுத்து அவர்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் தேடி மாணவன் உடலைக் கண்டுபிடித்தனர். 

அதன் பின்னர் போலீஸார் ஜீவித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

foot ball player died drowned lake in pallikaranai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->