#தமிழகம் || 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நெல்லை மாஞ்சோலை, கோதையார் பகுதிகளில் அதிக கன மழை பெய்துள்ளது. தொடர் கனமழையால் மணிமுத்தாறு, பாபநாசம் அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

 

இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் மாவட்டங்களில் கன மழை தொடரும் என்பதால் தாமிரபரணி ஆற்றி தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க கூடும். இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனமழை நீடித்தால் தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Flood warning for 3 districts in TamilNadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->