5 மாத பெண் குழந்தைக்கு எமனாக வந்த தேங்காய் - திருவண்ணாமலையில் சோகம்.!!
five month baby died in thiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, சேத்துப்பட்டு அடுத்த மலையாம்புரவடை கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலம்பரசன்-அமுதா தம்பதியினர். இவர்களுக்கு தன்விகா என்ற 5 மாத பெண் குழந்தை ஒன்று இருந்தது. இந்த குழந்தையை நேற்று முன்தினம் மாலை அவரது தாத்தா ராஜா கையில் வைத்துக்கொண்டு வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் அருகே இருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று எதிர்பாராத விதமாக குழந்தை தன்விகா மீது விழுந்தது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தது.
தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்து ஐந்து மாத பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
five month baby died in thiruvannamalai