ஆற்றில் மிதந்த தந்தையின் உடல்..!! உடலை மீட்ட தீயணைப்பு வீரர்..!
Firefighter retrieves father's body floating in river
தனது தந்தை தான் என தெரியாமல் உடலை மீட்ட தீயணைப்பு வீரரின் செயல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோழிபாலம் பகுதியில் வசிப்பவர் வேலுசாமி (65). முன்னாள் தீயணைப்பு வீரரான இருவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர் நேற்று ஊருக்கு செல்வதாக கூறி வெளியில் சென்று இருக்கிறார்.
இதனை அடுத்து நேற்று கோழிபாலம் பகுதியில் ஓடும் ஆற்றில் உடல் ஒன்று செடிகளுக்கு இடையே சிக்கி இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயனைப்பு துறையினர் உடலை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளனர். அப்போது அவரின் உடையை ஆய்வு செய்தபோது தான் மீட்பு பணியில் ஈடுப்பட்ட பாலாவின் தந்தை வேலுசாமி என்பது தெரியவந்துள்ளது.
தனது தந்தை தான் என்பதை அறிந்த பாலா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். உடன் இருந்த சக வீரர்கள் பாலாவிற்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Firefighter retrieves father's body floating in river