நாளை உருவாகிறது "ஃபெங்கல்" புயல்! வெளுத்து வாங்கும் கனமழை! - Seithipunal
Seithipunal


வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 11:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது நாளைபுயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு "ஃபெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது.  

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் முன்னெச்சரிக்கையாக சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

{மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் ஆபத்தான பகுதிகளில் வசிப்போர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்}


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fengal Cyclone north east monsoon Chennai Rains


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->