மகளின் கண் முன்னே கள்ளக் காதலியுடன் உல்லாசம்..கொடூர தந்தையின் கொடுமைகள்.! - Seithipunal
Seithipunal


போதையில் பெற்ற மகள் கண்முன்னே கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரம் டோபி கானா தெருவை சேர்ந்தவர் குமரன் (37). இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருடைய மனைவி செல்வி பேபி உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இதனையடுத்து அவரது மகள் வாலாஜா அடுத்த மேல குப்பத்தில் அவரது தாத்தா வீட்டில் தங்கியுள்ளார். அப்போது மருமகனுக்கும், மாமனாருக்கும் ஏற்பட்ட தகராறில் குமரன் காட்பாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கஞ்சா போதையில் இருக்கும் குமரன் பெற்ற மகள் என்றும் கூட பாராமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து பெற்ற மகள் முன்பாகவே அவர் கள்ளக்காதலுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் தனது மகளிடமும் பாலியல் அத்துமீறல்களை தொடர்ந்துள்ளார். இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது சொன்னால் கொலை செய்துவிடுவேன் என தனது மகளை மிரட்டியுள்ளார்.

இந்தநிலையில் அந்த சிறுமியின் தாத்தா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது பேத்தியை அழைத்து விசாரித்துள்ளார். இப்போது பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை அந்த சிறுமி தெரிவித்துள்ளார். எனது தந்தை வீட்டிற்கு பெண் ஒருவரை அழைத்து வருவார் இருவரும் துணி இல்லாமல் ஒன்றாக இருப்பார்கள் தந்தை என்னிடம் தவறாக நடந்து கொள்வார் என்று அழுதபடி கூறியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குமரனைக் சபையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father sexual Harrasment for daughter


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->