விருந்துக்கு வந்த மருமகனை வெட்டி கொண்ட மாமனார்.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


விருந்துக்கு வந்த மருமகனை வெட்டி படுகொலை செய்த மாமனாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம்,  வீரபுரத்தை சேர்ந்தவர்  முத்தரசன். இவருக்கு கடத 13ம் தேதி அரவிந்தியா பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில், திருமணம் முடிந்து மாமனார் வீட்டிற்கு முத்தரசன் விருந்திற்காக வந்துள்ளார்.  இந்நிலையில், சம்பவதன்று அவரின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அக்கம்பக்கதினர் அங்கு வந்து பார்த்தபோது முத்தரன் வெட்டுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரது மாமனார் ரவிசந்திரனை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father in law kills his Son in law in Thiruvarur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->