மன்னார்குடி அருகே சோகம்.! மின்னல் தாக்கி தந்தை-மகன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் வயலில் தேங்கிய மழை நீரை வடியவைக்க சென்றபோது மின்னல் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் தளிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் விவசாயி அன்பரசு (53). இவரது மகன் அருள்முருகன் (28). நேற்று இரவு கனமழை பெய்ததால், இவர்கள் இருவரும் வயலில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைப்பதற்காக சென்றுள்ளனர்.

அப்பொழுது வயலில் தேங்கி இருந்த மழை நீரை வடிய வைத்துக் கொண்டிருந்தபோது திடீரென இடியுடன் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மன்னார்குடி போலீசார், உயிரிழந்த அன்பரசு மற்றும் அருள் முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Father and son killed by lightning in mannargudi near


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->