மது அருந்த பணம் தர வற்புறுத்திய ரவுடி..வெளுந்து வாங்கிய தந்தை மகன்..!
Father and Son Beaten the Rowdy
மது குடிக்க பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை தந்தை மகன் தாக்கிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நடவண்டி மோகன். இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.இவர் வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வந்த மாரிமுத்து மற்றும் அவரது மகன் மதியழகனிடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அவர்கள் நடவண்டி மோகனை சரமாரியாக தாக்கினர். இதில், படுகாமடைந்தவ அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த ரவுடியை தந்தை மகன் கொடுரமாக தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Father and Son Beaten the Rowdy