அருவியில் குளிக்கச் சென்ற தந்தை, மகள் - தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


அருவியில் குளிக்கச் சென்ற தந்தை, மகள் - தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம்.!

கடந்த மாதத்திலிருந்து தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது. அதனால் பொதுமக்கள் குளிர் பிரதேசங்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். அது,மட்டுமல்லாமல், தற்போது பொதுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத் தளங்களில் மக்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், சென்னை மந்தவெளி பகுதியில் வசிக்கும் பாலமுரளி என்பவர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக  ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்கள் நல்லூர் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு பாலமுரளி தனது மகள் மக்களுடன் பாறை மீது ஏற்றியுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களது கால் நழுவி இருவரும் கீழே விழுந்தனர். அதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் கதறி அழுதனர்.  

அதன் பின்னர் பாலமுரளி மற்றும் அவரது மகள் இருவரும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எகொண்டுச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father and daughter died in yercud nalloor hills


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->