தஞ்சாவூர் அருகே பரிதாபம்.! வயலுக்குச் சென்ற விவசாயிக்கு நேர்ந்த சோகம்.! அதிர்ச்சியில் குடும்பம்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி இளங்கோ(56). இவர் வயலில் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இளங்கோ வயலுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது வயலில் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத இளங்கோ எதிர்பாராத விதமாக மின் கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதைப்பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer killed by electrocution in Thanjavur


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->