இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் இருசக்க வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையம் அண்ணமார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி மோகனரங்கம் (58). இவர் கொங்கர்பாளையம் சமனக்காடு பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வாய்க்கால் கரை ஒட்டிய சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக காட்டுப்பன்றி குறுக்கே வந்ததால், மோகனரங்கம் திடீரென இருசக்கர வாகனத்தில் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து மோகனரங்கம் கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த மோகனரங்கனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மோகனரங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmer killed after falling from twowheeler in erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->