வாங்கிய கடனை திரும்ப தர முடியவில்லை.. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை..கன்னியாகுமரியில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளாங்காடு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் குட்டி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் நித்யா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன் மகளின் திருமணத்திற்காக பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், அவரது மகள் ஆறு மாதத்திற்கு முன் கணவனை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்காக பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டுவந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அவர் தூங்குவதற்கு முன்பாக கிருஷ்ணங்குட்டி, அவரது மகள் நித்தியா மற்றும் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் அக்கம்பக்கதினர் உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அவர்கள் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள்  உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Family Committed suicide in Kanniyakumari


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->