முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மருத்துவமனையில் திடீர் அனுமதி.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் மாதிரியை பரிசோதனை செய்த போது அது 'ஜே.என்.- 1' என்ற உருமாறிய புதுவகை கொரோனா என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பாதிப்பு தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் தொற்று எண்ணிக்கை குறைவாக பதிவாகி இருந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex minister cv shanmugam admitted hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->