பொருட்கள் வாங்குவதுபோல நடிப்பு.. 3 இலட்சத்தை தூக்கிச்சென்ற பெண்.!
Erode Fancy Shop Woman Stolen Rs 3 Lakh Amount Police Investigation as per CCTV Footage 18 April 2021
பேன்சி ஸ்டோரில் பொருள்கள் வாங்குவது போல நடித்து, கடையில் இருந்த ரூபாய் மூன்று இலட்சத்தை இலாகவமாக திருடிச் சென்ற பெண்ணை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஈரோட்டில் உள்ள கிழக்கு கொங்கலம்மன் பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள், ஆடை மற்றும் அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இந்த கடையில் ஆண்கள் சிலர் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது, பெண் ஒருவர் வந்துள்ளார். அங்கே இருக்கும் பொருட்களை வாங்குவது போல் பாவனை செய்து, கடையிலிருந்து ரூபாய் மூன்று இலட்சத்தை திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்து போது, பணத்தை அடையாளம் தெரியாத பெண் களவாடி சென்றது தெரியவந்துள்ளது. இந்த பெண்மணி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Erode Fancy Shop Woman Stolen Rs 3 Lakh Amount Police Investigation as per CCTV Footage 18 April 2021