தடுப்பூசி போட ஆற்றை கடந்து சென்ற மருத்துவர்., சமூக வலைத்தளங்களில் குவியியும் பாராட்டு!! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மக்களுக்கு தொண்டை அடைப்பான் என்ற நோய் தாக்குதலால்  பாதிக்கப்பட்ட சிறார்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, அந்த வனப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நடமாடும் மருத்துவக்குழுவினர் வீடு வீடாகச்சென்று, தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் சுமார் 15 குடும்பங்கள் வசிக்கும், பூதிகுப்பை வனகிராமத்துக்கு, மாயாற்றை கடந்து செல்ல பாலம் இல்லாததால், மருத்துவ அலுவலர் சவீதா தலைமையிலான மருத்துவ குழுவினர், தண்ணீரில் இறங்கி, ஆற்றைக் கடந்து சென்று தடுப்பூசி போட்டுத் திரும்பினர்.  

மருத்துவர் தலைமைலான குழு ஆற்றை கடந்து பூதிகுப்பை கிராமத்துக்கு தடுப்பூசி போட்ட புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் பரவி மருத்துவக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode doctor vairal photo


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->