#Breaking : இபிஎஸ் வெளியிட்ட இரங்கல் செய்தி! ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தல்!
Eps emphasis 25 lakhs give who died in the Madurai explosion
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அனைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த வெடி விபத்தில் வடக்கம்பட்டியைச் சேர்ந்த அம்மாவாசை, வல்லரசு, கோபி, புலியகவுண்டம்பட்டியை சேர்ந்த விக்கி, மற்றும் அழகுசிறையைச் சேர்ந்த பிரேமலதா ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வெடி விபத்தில் சிக்கிய சிலரை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இறங்கச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் செய்தி குறிப்பில் "மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டி அடுத்த அழகுசிறையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த ஐந்து பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் எழுப்பீடு வாங்கவும் இவ்வரிசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Eps emphasis 25 lakhs give who died in the Madurai explosion