தேர்தலில் தோற்று மனம் குமுறி வேட்பாளர் வைத்த பேனர்.! 
                                    
                                    
                                   election lost candidate banner in his village 
 
                                 
                               
                                
                                      
                                            விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் காசி இவர், தன்னை தோல்வியடைய செய்த ஊரில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி என போஸ்டர் ஒட்டியுள்ளார்.
மேலும், உங்களை நான் நம்பினேன் ஆனால் நீங்கள் இப்படி நம்பிக்கை துரோகம் செய்வீர்கள் என கனவில் கூட நினைக்கவில்லை என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இதேபோல அத்திகுளம் தெய்வேந்திரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் பிரதிவிராஜன் இவரும் தேர்தலில் தோல்வியுற்றார். இவரும் பணம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி என ஊரில் பேனர் வைத்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       election lost candidate banner in his village