திருவள்ளூரில் அதிர்ச்சி.! கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி, இளம்பெண்ணை சீரழித்த ஊர் பெரியவர்...! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய ஊர் பெரியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த ஊர் பெரியவரான கிருஷ்ணன் (66) என்பவர், கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதேபோன்று, இளம்பெண்ணை பலமுறை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து இளம்பெண் கர்ப்பமான நிலையில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு குறை பிரசவத்தில் பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. இந்நிலையில் இளம்பெண் இறந்து பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாத வகையில், வீட்டின் அருகே பள்ளம் தோண்டி புதைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அறிந்த இளம்பெண்ணின் தந்தை, இதுகுறித்து திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஊர் பெரியவரான கிருஷ்ணனை கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

elder of the villager arrested for made the young woman pregnant in tiruvallur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->