கிருஷ்ணகிரி: புளியம்பழத்திற்காக தகராறு.. தம்பியை சரமாரியாக தாக்கிய அண்ணன் கைது.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளியம்பழம் பறித்ததற்காக ஏற்பட்ட தகராறில் தம்பியை சரமாரியாக தாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்தனர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே சி.ஆர்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணப்பா. இவருடைய தம்பி கோபாலப்பா. இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான புளியமரத்தில் கோபாலப்பா புளியம்பழம் பறித்துள்ளார். அப்பொழுது அண்ணன் ஜெய்கிருஷ்ணாப்பா தம்பியை புளியம்பழம் பறிக்க கூடாது என்று கண்டித்துள்ளார். இதனால் இவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஜெய்கிருஷ்ணாப்பா தம்பியை கற்களாலும், கையாலும் சரமாறியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோபாலப்பா சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோபாலப்பா தளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தம்பியை தாக்கிய அண்ணன் ஜெய்கிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elder Brother arrested for assaulting younger brother in kirishnagiri


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->