தமிழகத்தில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதில், தமிழகத்தில் ஆயிரம் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் பதவி உயர்வு மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்களையும் அதுபோல 17ஏ, 17பி பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை பரிந்துரைக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல், தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு பரிந்துரைக்கக் கூடாது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

education department announce head master vacancies fill


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->