மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு?.. தமிழக முதல்வர் சூட்சம பேச்சு..!!
Edappadi Palanisamy 26 june 2020 Discuss with Special Doctor Team to LockDown in Tn
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் கோவை, சேலம், திருச்சி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனா தடுப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். மேலும், அந்தந்த மாவட்டங்களுக்கு தேவையான பல திட்டங்களையும் அறிவித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று (26 ஜூன் 2020) திருச்சி மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு திங்கட்கிழமை தெரியும் என்று கூறினார்.
மேலும், இது தொடர்பாக முதல்வர் பேசுகையில், தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா? என்பது குறித்து வரும் திங்கள்கிழமை சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மத்திய அரசு அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொருத்தும், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Edappadi Palanisamy 26 june 2020 Discuss with Special Doctor Team to LockDown in Tn