இன்று மதுரையில் பிரச்சாரம் செய்கிறார் இபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, தென்காசி தொகுதி வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து பேசினார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து கார் மூலம் சிவகாசிக்கு வந்தார். அதன் படி இன்று சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த தொழிலதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து இன்று மாலை பாவடி தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் மதுரை வருகிறார்.

இரவு 7 மணிக்கு மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதுரை நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமியிடம் பேசுகிறார். கூட்டம் முடிந்த பின்னர் மதுரையில் இருந்து இரவு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edapadi palanisamy election campaign in madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->