அக்டோபர் கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம்!! வெள்ளம் பாதித்த மக்களுக்கு சலுகை.!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இதன் காரணமாக மேற்கண்ட 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்யும் பணியில் சிரமம் ஏற்பட்டதால் மின்சார வாரியம் விளக்கம் அளித்திருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாத கணக்கீட்டின்படி நுகர்வோர்கள் தங்களின் மின் கட்டணத்தை செலுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் வெள்ளம் பாதித்த மக்களுக்கு சலுகையாக கடந்த மாத மின் கட்டணம் செலுத்துவதற்கு கடைசி நாள் டிசம்பர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை இருந்த நிலையில் புயல் பாதிப்பு காரணமாக அபராத தொகை இல்லாமல் வரும் டிசம்பர் 18ம் தேதிக்குள் நுகர்வோர்கள் தங்களின் மின்கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EB bill can be paid according to October calculation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->