ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைப்பு.. திமுகவினர் அட்டகாசம்..!! கரூரில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். மேலும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் சொந்தமான வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கரூர், கோவை, சென்னை ஆகிய இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடுகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் அவரது வீட்டின் முன்பு குவிந்த திமுகவினர் வருமானவரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் கண்ணாடியை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk carders broken IT officials car window in Karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->