உயிருக்கு பாதுகாப்பு இல்லை... அரசு மதுபான கடை வேண்டும்... ஆட்சியரிடம் திமுக கிளை செயலாளர் மனு..!! - Seithipunal
Seithipunal


திமுக கிளைச் செயலாளர் ஒருவர் மதுபானம் வாங்க 12 கிலோமீட்டர் தூரம் செல்ல உள்ளதால் டாஸ்மாக் கடை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை அடுத்த சித்தன்கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் திமுக கழக கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தனது கிராம குடிமகன்கள் சார்பாக டாஸ்மாக் கடை அமைக்க கோரி தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் "எங்கள் கிராமத்திலிருந்து நாங்கள் அனைவரும் மது வாங்க 12 கிலோமீட்டர் தூரம் சென்று வர வேண்டும். அப்படி செல்லும்போது வரும் வழியில் உயிர் சேதம் மற்றும் போலீஸ் துரிதமாக செயல்படுவதால் வீடு சென்று சேர முடியாத நிலையில் உள்ளோம். எனவே எங்கள் பாதுகாப்பை கருதி 12 கிலோமீட்டர் செல்லும் நிலையில் மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் எங்கள் சித்தன்கொட்டாய் கிராமத்திலேயே டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அதற்கான இடத்தையும் கட்டிடமும் நாங்களே கட்டி தயார் நிலையில் உள்ளது.

இந்த டாஸ்மாக் கடை கட்டிடப்பட்ட இடத்தில் ஐந்து வீடுகள் தவிர கிராமங்கள் இல்லை மற்றும் மலைப்பகுதி என்பதால் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. இங்கிருந்து நாயக்கன் அல்லி ஊராட்சி சோலை கொட்டாயில் இருக்கும் ராமதாஸ் அறக்கட்டளை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, பி.எஸ்.ஏ அறிவியல் கலைக்கல்லூரிக்கும் 4.5 கிலோமீட்டர் தூரம் உள்ளதால் யாருக்கும் எந்தவிதமான தடைகளும் பாதிப்புகளும் இல்லை. இந்த இடத்திற்கு டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். திமுக கிளைச் செயலாளர் இந்த மனு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK admin gave petition to district collector for Tasmac shop


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->