காலையில் நோட்டமிட்டு, இரவில் திருட்டு.. தடுப்பு வேலியில் தவறி விழுந்து சிக்கிய பலே திருடன்.!!
Dindigul Nilakottai Medial Shop Thief Arrest by Police
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை நகரில் மெடிக்கல் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை நள்ளிரவில் திறந்து உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே, இரவுநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
காவல் துறையினரை கண்டதும், கடைக்குள் இருந்த வாலிபர் தப்பி செல்ல முயற்சித்த நிலையில், அவர் எடுத்து வந்திருந்த கடப்பாரை சமூக இடைவெளிக்காக அமைக்கப்பட்டு இருந்த கம்பியின் மீது மோதி கீழே விழுந்து காவல் துறையினரிடம் சிக்கியுள்ளார்.
அவரிடம் இருந்த ரூ.37 ஆயிரம் ரொக்கமும் மீட்கப்பட்ட நிலையில், அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியைச் சார்ந்த லட்சுமணன் என்பது தெரியவந்துள்ளது.
திருட்டு செயல்களில் திருப்புளி, கட்டிங் பிளேடு, கடப்பாரை போன்ற பொருட்களை உபயோகம் செய்து திருடும் ஆசாமி என்பதும் தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 57 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் ஐந்து நாட்களுக்கு முன்னதாக தான் சிறையில் இருந்து விடுதலையாகி உள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்தன்று மாலை நேரத்தில் தலைவலிக்கு மருந்து வாங்க லட்சுமணன் கடைக்கு வந்த நிலையில், அதிகளவு பணத்தை கல்லாப் பெட்டியின் உள்ளே உரிமையாளர் வைப்பதை பார்த்து இரவில் திருட வந்ததும் தெரியவந்துள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Dindigul Nilakottai Medial Shop Thief Arrest by Police