சென்னை விமான நிலையத்தில் சிக்கிய வைரக்கற்கள் - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்திற்கு செல்லும் பயணி ஒருவர் அதிக அளவில் வைரக்கற்கள் கடத்தி செல்வதாக சென்னை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் படி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது, தாய்லாந்திற்கு செல்லும் பயணி ஒருவரின் சூட்கேசில் வைரக்கற்கள் மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. 

அந்த சூட்கேசில் இருந்து சுமார் 1,004 காரட் எடையுள்ள ரூ.2.33 கோடி மதிப்பிலான வைரக்கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது பெயர் ஜாவித் அகமது காதர் மைதீன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஜாவித்தை கைது செய்து, இந்த வைரக்கற்கள் கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diamonds seized in chennai airport


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->