சிறுமியை அழைத்து சென்று திருமணம்.. கட்டிட தொழிலாளி கைது.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் நீலம்பூர் பகுதியில், தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த மணிகண்டன் என்ற 21 வயது கூலித்தொழிலாளி, அங்கயே தங்கியிருந்து கட்டிட பணிகளுக்கு சென்று வந்துள்ளார். இவரது நண்பரான தர்மபுரியை சார்ந்த பூபதியும் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், மணிகண்டனுக்கு இப்பகுதியை சார்ந்த 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழக்கம் ஏற்படவே, இதனை சிறுமியின் பெற்றோர்கள் அறிந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியை அவரது பெற்றோர்கள் கண்டிக்கவே, மணிகண்டன் சிறுமியிடம் திருமண ஆசை காண்பித்து இருசக்கர வாகனத்தில் தர்மபுரிக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளான். 

மேலும், சிறுமியை மணிகண்டன் அழைத்து சென்ற இருசக்கர வாகனம் பூபதியின் இருசக்கர வாகனம் ஆகும். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

மேலும், தனிப்படை காவல் துறையினர் தர்மபுரிக்குக் சென்று மணிகண்டனை பிடித்து சிறுமியை மீட்டு சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பூபதி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Coli Worker Arrest Love Marriage Coimbatore Sulur Child girl Drama Love 5 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->