தம்பிக்காக அண்ணன் உயிரை விட்ட சோகம்.! விஷவாயுவால் ஏற்பட்ட விபரீதம்.!
death in chennai
சென்னையில் உள்ள ராயப்பேட்டை வணிக வளாகம் ஒன்றில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய ரஞ்சித் குமார், அருண் குமார் உள்ளிட்ட 5 பேர் அதிகாலை சென்றனர். அப்போது, ரஞ்சித் குமார் உள்ளே இறங்கினர். மேலும் அவர் கழிவு நீர்த் தொட்டியில் மயங்கி இருக்கிறார்.
இதை தொடர்ந்து, தனது தம்பி மயங்கி இருப்பதை அறிந்த அருண்குமார், தம்பியை காப்பாற்றுவதற்காகக் கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவரை அதிலிருந்து வந்த விஷவாயு தாக்கியது. ரஞ்சித்தை மேலே தூக்கிவிட்டு, விஷவாயு தாக்கியதால் அருண்குமார் அதனுள் விழுந்து சம்பவ இடத்திலையே இறந்தார்.
இதை தொடர்ந்து, அவரை மேலே தூக்கி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அருண்குமாரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தகுந்த உபகரணம் இல்லாமல் குழிக்குள் இறங்கியதால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய காவல்துறையினர், பாதிக்கப்பட்டவர்களை பணியமர்த்திய நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இளைஞரின் உயிரிழப்புக்குக் காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.