17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி.. தருமபுரியில் சோகம்.!!
Darmapuri girl sexual abuse by police
தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் கிராமத்தை சார்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்த புகாரில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் எனது சொந்த ஊர். நான் கோயம்புத்தூரில் பெற்றோருடன் வசித்து வருகிறேன்.
கோவையில் நான் பதினோராம் வகுப்பு பயின்று வரும் நிலையில், கடந்த 3 வருடத்திற்கு முன்னதாக சொந்த ஊரில் வீட்டில் நான் தனியாக இருந்தேன். இந்த நேரத்தில், தருமபுரி சேஷம்பட்டி பகுதியை சார்ந்த எனது உறவினர்கள் வெற்றிவேல் (வயது 27) என்பவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த தருணத்தில், வெற்றிவேல் காவல் துறை அதிகாரியாக பணியில் சேர்ந்து, கோயம்புத்தூர் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வருகிறார். பின்னர் எனது இல்லத்திற்கும் வந்து திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்னதாக சேஷம்பட்டிக்கு வந்த வெற்றிவேல், மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பெற்றோருடன் சிறுமி சென்று வெற்றிவேல் குடும்பத்தினரிடம் கேட்கவே, அவதூறாக பேசியுள்ளனர். இதனையடுத்து சிறுமி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த விசயத்திற்கு உடந்தையாக இருந்தையாக இருந்த வெற்றிவேலின் தாயார் மகேஸ்வரி (வயது 50), சகோதரர் பத்மநாபன் (வயது 29) மற்றும் உறவினர் சுரேஷ் ஆகியோரின் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Darmapuri girl sexual abuse by police