10 நாட்கள் பழக்கம்.. 10 சவரன் நகையுடன் மாயம்.. முகநூலால் நடுவீதியில் பரிதவித்த பெண்மணி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை பகுதியை சார்ந்தவன் ஜோஸ். இங்குள்ள வேர்களைவி கிராம பகுதியை சார்ந்த பெண்மணி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த பெண்மணி முகநூல் கணக்கு வைத்துள்ளார். 

இவருக்கு முகநூல் மூலமாக ஜோசின் பழக்கம் ஏற்பட்ட நிலையில், தனது குடும்ப சூழ்நிலை குறித்து கூறியுள்ளார். பின்னர் இவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்து, அங்குள்ள பல பகுதிகளுக்கு சென்று வந்த நிலையில், தான் பெட்ரோல் நிலையம் துவங்கவுள்ளதாக ஜோஸ் கூறியுள்ளான். 

மேலும், இதற்கு பணம் தேவைப்படுகிறது என்று கூறவே, பெண்மணியிடம் இருந்து 10 சவரன் நகையை நூதன முறையில் வாங்கியுள்ளார். பின்னர் பெண்ணை நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் அமரவைத்துவிட்டு, நகையை விற்பனை செய்து பணமாக மாற்றி வருவதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து ஜோசின் வார்த்தைகளில் விழுந்த பெண்மணி பேருந்து நிலையத்திலேயே காத்திருக்க இறுதியில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண்மணி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு ஜோஸை கைது செய்தனர். ஜோசின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 10 நாட்கள் பழக்கத்திலேயே பெண் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Culprit arrest by police for cheated girl Facebook connection in Kanyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->