மது அருந்தச்சென்ற இடத்தில் கோஷ்டி மோதல்.. கொலைவெறித்தாக்குதலில் வாலிபர் பரிதாப மரணம்.!
Cuddalore Youngster Murder in Pondicherry When went Pondy with Friends Drinking Alcohol
கடலூர் மாவட்டத்தில் உள்ள சாவடி அய்யா நகர் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீகாந்த், இவரது மகன் மனோஜ் நந்தன் (வயது 30). இவர் லாரி உரிமையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று காணும் பொங்கலையடுத்து தனது நண்பர்களான கார்த்திக், பிரதாப் உட்பட 5 பேருடன் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாகூர் சோரியாங்குப்பம் மதுபான கடைக்கு சென்றுள்ளார்.
மதுக்கடையில் மதுபானங்களை வாங்கிவிட்டு, கடையின் பின்புறம் உள்ள காலி மனையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதன்போது, இவர்களுக்கு அருகிலேயே 10 க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக சார்ந்து மது அருந்திய நிலையில், அந்த கும்பலை சார்ந்தவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை மனோஜ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டி கேட்டதால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதல் சம்பவம் நடந்துள்ளது.
இதனையடுத்து ஆத்திரமடைந்த 10 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த உருட்டுக்கட்டை மற்றும் கற்களை வீசி மனோஜின் தரப்பினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மனோஜிற்கு மார்பு மற்றும் முதுகு பகுதியில் வெட்டுக்காயமும், கார்த்திக்கிற்கு உடலில் காயமும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கும்பல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், மனோஜின் நண்பர்களும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
தாக்குதலில் நிலைகுலைந்து இருந்த மனோஜ் இரத்தம் வரும் இடத்தில் சட்டையை கிழித்து, அங்கிருந்த இருசக்கர வாகனம் மூலமாக மருத்துவமனைக்கு செல்ல முயற்சி செய்துள்ளார். இதன்போதே, அங்குள்ள பால் சொசைட்டி பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், மனோஜை மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், அவர் வெட்டுக்காயத்தில் அதிக இரத்தம் வெளியேறி இறந்துள்ளார். கார்த்திக் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பாகூர் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து வழக்குபதிவு செய்து, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டு கொலையை அரங்கேற்றிய 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Cuddalore Youngster Murder in Pondicherry When went Pondy with Friends Drinking Alcohol