காதலித்து ஏமாற்றிய வாலிபர்.. காவல் நிலையத்தில் வைத்து அதிகாரிகள் புடைசூழ டும்..டும்..டம்..!!
Cuddalore Police Station Cops Arrange Marriage for Couple He cheat She
காதலித்து கர்ப்பிணியாக்கிய விட்டு பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த காதலனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அதிகாரிகள், அங்கு இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் நடத்தி வைத்த சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுவண்டிப்பாளையம் பகுதியைச் சார்ந்த பட்டதாரி பெண்மணி கலைச்செல்வி. கலைச்செல்வியை காதல் வலையில் வீழ்த்திய தமிழ்ச்செல்வன், கடந்த ஒரு வருடமாக ஊர் ஊராக அழைத்துச் சென்று காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், காதலன் காதலியை ஆசைக்கு இணங்க கூறி வற்புறுத்திய நிலையில், காதலன் கரம்பிடிப்பான் என்ற எண்ணத்தில் கலைச்செல்வியும் அதற்கு சம்மதித்துள்ளார். இதனால் அவர் கர்ப்பிணியான நிலையில், தமிழ் செல்வன் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் செய்யமாட்டார்கள் என்று கூறி காதலியை கழட்டிவிட்டு இருக்கிறான்.
இந்த விஷயம் தொடர்பாக கலைச்செல்வி கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், காவல்துறை அதிகாரிகளிடம் நான் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்., பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று தமிழ்செல்வன் நழுவியுள்ளான்.
இதனையடுத்து, தமிழ்ச்செல்வனின் பெற்றோரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகள், இருதரப்பு பெற்றோர்கள் முன்னிலையில் அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். தங்களின் சொந்த செலவில் வேட்டி, சேலை, பூ மாலை வாங்கி வந்து காவல் நிலையத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்குப் பின்னர் காவல் அதிகாரிகள் மற்றும் பெற்றோரின் காலில் விழுந்து ஆசி வாங்கிய ஜோடிகள் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும், காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளையில் திருமணத்திற்கு உடன்படவில்லை என்றால் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்படுவாய் என சட்டங்களை விளக்கி எச்சரித்த பின்னர் திருமணத்திற்கு தமிழ் செல்வன் ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் விரக்தியில் இருந்ததை அவரது முகம் வெளிக்காண்பித்தது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Cuddalore Police Station Cops Arrange Marriage for Couple He cheat She