கணவனை போட்டுத்தள்ளி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. 9 மாதம் கழித்து தூக்கிய காவல்துறை.!!
Cudallore murder case illegal affair couple arrest by police
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலத்தை அடுத்துள்ள இருப்பு கிராம பகுதியை சார்ந்தவர் செல்வராஜ். இவரது தோட்டத்தில் கடந்த வருடத்தின் ஜூலை மாதம் 13 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத எரிந்த சடலம் இருந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் சடலத்தை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், எரிந்து கிடந்த சடலம் கடலூர் மேற்கு இராமாபுரம் பகுதியை சார்ந்த ஸ்ரீதரன் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஸ்ரீதரனின் மனைவி சுதாவிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், இப்பகுதியை சார்ந்த சிவராஜ் என்பவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பது. இதில் சுதாவிற்கும், சிவராஜிற்கும் இடையே கள்ளக்காதல் இருப்பது தெரியவந்துள்ளது. இருவரும் உல்லாசமாக இருப்பதை ஸ்ரீதரன் நேரில் பார்த்துவிடவே, பதற்றமடைந்த இருவரும் ஸ்ரீதரை அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை காரில் எடுத்து கொண்டு, விருத்தாசலம் அருகேயுள்ள இருப்பு கிராமத்தில் அமைந்துள்ள முந்திரி காட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்தும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
English Summary
Cudallore murder case illegal affair couple arrest by police