மகன் பெயரில் அறக்கட்டளை ஆரம்பியுங்கள்.. மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட தம்பதி..! - Seithipunal
Seithipunal


மகன் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் பக்தர்கள் புனிதநீராடி கொண்டிருந்தனர். அப்போது முதியவர் மற்றும் மூதாட்டி ஆகிய இருவர் கடலில் பிணமாக மிதந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து  வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவர்களிடம் இருந்து  ஆதார் கார்டை கைப்பற்றினர்.அதன் மூலம், அவர்கள் கோவையை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 62), தனலட்சுமி (59) என்பது தெரியவந்தது.

அவர்களின் மகன் கடந்த ஆண்டு இறந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3-ந் தேதி கோவிந்தராஜூம் அவரது மனைவியும் ராமேஸ்வரம் வந்து தங்கியுள்ளனர். தங்கள் உறவினர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.அதில், தங்கள் சொத்துகளை விற்று கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்களது மகன் பெயரில் அறக்கட்டளை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்  என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Committed Suicide In Rameshwaram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->