மக்களே உஷார் : தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி!!
Continue rain Break house wall ower death
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து செந்தமிழ் என்பவர் உயிரே அந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை ஆங்காங்கே அவ்வபோது கனமழை பெய்து வருகிறது. சேலத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
இந்த நிலையில், சேலம் அன்னதானபட்டியை சேர்ந்தவர் செந்தமிழ். சேலம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்த காரணத்தினால் செந்தமிழ் வீட்டின் மண் இடிந்து விழுந்ததில் உறங்கிக் கொண்டிருந்த செந்தமிழ் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Continue rain Break house wall ower death