திடீரென தீ பற்றி எறிந்த கண்டெய்னர் லாரி! புல்லட் மோட்டார் சைக்கிள்கள் எறிந்த சேதம்!  - Seithipunal
Seithipunal


ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வடகால் பகுதியில் பிரபல நிறுவனத்தின் புல்லட் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 

இங்கிருந்து புல்லட் மோட்டார் சைக்கிள் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 88 புல்லட் மோட்டார் சைக்கிள் நேற்றிரவு தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர் லாரியில் ஜார்கண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த கண்டெய்னர் லாரி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென லாரியில் கரும்புவை வந்தது. 

இதனை கவனித்தால் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி சிறிது நேரத்தில் கன்டெய்னர் லாரி முழுவதுமாக தீப்பற்றி எறிய தொடங்கியது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர் உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி முழுமையாக அணைத்தனர். 

இருப்பினும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட புல்லட் மோட்டார் சைக்கிள்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. மற்ற மோட்டார் சைக்கிள்களும் தீயினால் சேதம் ஏற்பட்டிருந்தது. 

இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த ஒரகடம் போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

container lorry catches fire bullet motor cycles burnt


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->