ஆற்றில் குளிக்க சென்று துடிதுடிக்க உயிரிழந்த தாய் மகள்.. பரிதாப தகவல்.!!
Coimbatore mom and daughters died in river
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு கொண்டாம்பட்டி பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கண்ணம்மா என்கிற கமலம் (வயது 40). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு சத்தியா (வயது 18) என்ற மகளும், சத்யா (வயது 15) என்ற மகளும் இருக்கின்றனர்.
சந்தியா அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், சத்யா பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில வருடத்திற்கு முன்னதாக சுப்பிரமணி இறந்துவிடவே, கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக ஆனைமலை பகுதியில் இருக்கும் இந்திரா நகரில் உள்ள தனது மாமியாரின் இல்லத்திற்கு தனது மகள்களுடன் சென்றுள்ளார்.
பின்னர் அங்குள்ள ஆழியாறு பகுதியில் மகள்களுடன் குளிக்க முடிவு செய்து, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக்கொண்டு மூவரும் சென்றுள்ளனர். கண்ணம்மா துணிகளை துவைக்கவே, மகள்கள் இருவரும் தண்ணீரில் குளித்துள்ளனர். இதில் சத்யா திடீரென ஆழமான பகுதிக்குள் சென்று நீரில் தத்தளிக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கண்ணம்மாவும் தண்ணீரில் விரைந்து சென்று காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
இதில் கண்ணம்மாவும் நீரில் தத்தளிக்கவே, சந்தியாவும் தனது தாய் மற்றும் சகோதரியை காக்கும் பொருட்டு நீரில் ஆழமான பகுதிக்கு செல்லவே, மூவரும் பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். மேலும், மூவரது உடலும் நீண்ட நேர தேடலுக்கு பின்னர் காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore mom and daughters died in river