கோவை கோவில்கள் அவமதிப்பு விவகாரம்.. சேலத்தில் கைதான முதியவர்.!!
Coimbatore Hindu temple damaged person arrest by police
கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசி வீடியோ பதிவு செய்த நிலையில், இந்த வீடியோ காட்சிகள் இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது..
இதன்பின்னர் கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சார்ந்த நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டு நாட்களாக இருதரப்பிற்கு பல மோதல்கள் சம்பவம் நடைபெற்ற நிலையில், கோவையில் 3 இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது. ஏற்கனவே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் ஊற்றிய நபர் தானாக முன்வந்து சரணடைந்து இருந்தார்.
இந்த நிலையில், 3 கோவில்களை சேதப்படுத்திய கஜேந்திரன் என்பவர் காவல் துறையினரால் சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் 3 தனிப்படை அமைத்து காவல் துறையினர் குற்றவாளியை தேடிவந்த நிலையில், கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Coimbatore Hindu temple damaged person arrest by police