கோவை கோவில்கள் அவமதிப்பு விவகாரம்.. சேலத்தில் கைதான முதியவர்.!! - Seithipunal
Seithipunal


கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனல் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசி வீடியோ பதிவு செய்த நிலையில், இந்த வீடியோ காட்சிகள் இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. 

இதன்பின்னர் கருப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சார்ந்த நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இரண்டு நாட்களாக இருதரப்பிற்கு பல மோதல்கள் சம்பவம் நடைபெற்ற நிலையில், கோவையில் 3 இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது. ஏற்கனவே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் ஊற்றிய நபர் தானாக முன்வந்து சரணடைந்து இருந்தார். 

இந்த நிலையில், 3 கோவில்களை சேதப்படுத்திய கஜேந்திரன் என்பவர் காவல் துறையினரால் சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் 3 தனிப்படை அமைத்து காவல் துறையினர் குற்றவாளியை தேடிவந்த நிலையில், கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Hindu temple damaged person arrest by police


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->