கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு: காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


பா.ஜ.கவினர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ராவணன் போல் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனை கண்டித்து நேற்று மாலை கோவை காந்திபுரம் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்திருந்தனர். 

காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து பா.ஜ.கவினர் அங்கு திரண்டனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் காவல்துறை பாதுகாப்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமை தாங்கினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

பா.ஜ.கவினர் காவல்துறை அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் மாவட்ட தலைவர், பா.ஜ.க மாநில துணை தலைவர் மற்றும் கோவை மாவட்ட துணை தலைவர் உள்பட முக்கிய நிர்வாகிகளான 6 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore District BJP leaders against Case filed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->